பல்லவி
ராம ஸீதா ராம ராம ராஜ தனய ராம த3ஸ1ரத2
ராம ஸீதா ராம ராம ரகு4 குலாப்3தி4 ஸோம
சரணம்
சரணம் 1
உரக3முலு பெனகி3னட்லுன்னதி3 நா மனஸு
கருண ஜேஸி கண்ட ஜூசி கரமு பட்டு ராம (ராம)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ஸீதா/ ராம/ ராம/ ராஜ/ தனய/ ராம/ த3ஸ1ரத2/
இராமா/ சீதா/ ராமா/ இராமா/ மன்னன்/ மகனே (இளவரசே)/ இராமா/ தசரத/
ராம/ ஸீதா/ ராம/ ராம/ ரகு4/ குல/-அப்3தி4/ ஸோம/
ராமா/ சீதா/ ராமா/ இராமா/ இரகு/ குல/ கடலில் (உதித்த)/ மதியே/
சரணம்
சரணம் 1
உரக3முலு/ பெனகி3ன/-அட்லு/-உன்னதி3/ நா/ மனஸு/
அரவுகள்/ பிணைத்தது/ போன்று/ உள்ளது/ எனது/ மனம்/
கருண/ ஜேஸி/ கண்ட/ ஜூசி/ கரமு/ பட்டு/ ராம/ (ராம)
கருணை/ புரிந்து/ கண்ணால்/ நோக்கி/ கை/ பற்றுவாய்/ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - சந்த3முன - சந்தா3ன : 'சந்த3முன' சரியான சொல்லாகும்.
2 - உப்பொங்கெ3னு - உப்பொங்கி3னி : 'உப்பொங்கெ3னு' சரியான சொல்லலாகும்.
4 - கட்டு ரீதி மனஸு - கட்டு ரீதி நா மனஸு.
6 - கத3லது3 - கத3லனு : 'கத3லது3' இவ்விடத்தில் சரியான சொல்லலாகும்.
8 - ஸத்3வைராக்3யமுனிதி3யு - ஸத்3வைராக்3யமு நிதி4யு : 'ஸத்3வைராக்3ய' என்றிருந்தால், 'நிதி4யு' சரியாக இருக்கலாம். ஆனால், எல்லா புத்தகங்களிலும், 'ஸத்3வைராக்3யமு' என்று கொடுக்கப்பட்டுள்ளதால் 'நிதி4யு' தவறாகும்.
11 - போ4க3மந்து3 - போ4க3மொந்து3 : தியாகராஜர் மற்ற கிருதிகளிலும் 'போ4க3மந்து3' என்று பயன்படுத்துகின்றார். எனவே, 'போ4க3மந்து3' ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
3 - கல்ப பூ4ஜ - கற்பதரு - விரும்பியதையருளும் வானோர் தரு. கற்ப தருவினை கொடிகள் சுற்றியுள்ளதாகக் கூறுவர்.
5 - கல்பமுலு - கற்பம் - ஆயிரங்கோடியாண்டுகள்
9 - ஸாயுஜ்ய - இறைவனுடன் ஒன்றுதல் - ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்தலஹரி'யில் (செய்யுள் 28) இறைவனுடன் ஒன்றுதலில் உள்ள நான்கு படிகளான 'சாலோகம்', 'சாமீபம்', 'சாரூபம்' மற்றும் 'சாயுச்சியம்' விளக்கப்பட்டுள்ளது.
திருமூலரின் திருமந்திரம் செய்யுள் 1507 முதல் 1513 நோக்கவும்.
Top
விளக்கம்
7 - அத்3வைத ஸாம்ராஜ்யமு - இரண்டன்மை - அத்துவைதம். சதாசிவ பிரமேந்திரர் என்ற மகானின் 'கே2லதி பிண்டா3ண்டே3' என்ற கீர்த்தனையில் கூறப்படும் 'ஹம்ஸஸ்ஸோஹம் ஸோஹம் ஹம்ஸ' என்ற மகாவாக்கியத்தின் நேரடி உணர்வு.
10 - த்யாக3ராஜுசே சேயிஞ்சி - தியாகராசனால் சேவை செய்வித்து - 'தியாகராசனின் கரங்களால் சேவை செய்வித்து' என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனுக்கு சேவை செய்வதற்கும் இறைவனுடைய அருள் வேண்டும். இதனை 'அனுக்ரஹம்' என்று சம்ஸ்கிருதத்தில் கூறவர். இதுகுறித்து காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தினை நோக்கவும்.
11 - போ4க3மந்து3 - களிப்பு எய்துவாய் - இரண்டாவது சரணத்தில் கூறியபடியான 'உண்மையான மனைவி கணவனுக்குச் செய்யும் சேவை'யைக் குறிக்கும். இதனை, 'நாரத பக்தி சூத்திர'த்தில் (82) 'காந்தாசக்தி' (இறைவனிடம் மனைவியைப் போன்றதான பற்று கொள்ளுதல்) என்று கூறப்படும்.
பற்றறுத்தல் - 'வைராக்கியம்' எனப்படும் உலக இன்பங்களத் துறந்த நிலை
Top